சுவீடன், பின்லாந்து தலைவர்களுடன் பைடன் சந்திப்பு

வாஷிங்­டன்: உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­து­வ­ரும் நிலை­யில், நேட்டோ கூட்­ட­ணி­யில் சேர சுவீ­டனும் பின்­லாந்­தும் விண்­ணப்­பித்­துள்­ள­தைத் தொடர்ந்து, அந்­நாட்டுத் தலை­வர்­களை அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் சந்­தித்­தார்.

சுவீ­டன் பிர­த­மர் மெக்­ட­லினா ஆன்­டர்­சன், பின்­லாந்து அதி­பர் சாவ்லி நினிஸ்­டோவை வெள்ளை மாளி­கை­யில் சந்­தித்து நேட்டோ விண்­ணப்­பம் குறித்து திரு பைடன் கலந்­தா­லோ­சித்­தார்.

“இது வர­லாற்று சிறப்­பு­மிக்க நிகழ்வு. ஐரோப்­பிய பாது­காப்­பில் இது மிக முக்­கி­ய­மான தரு­ணம். நீண்­ட­கா­ல­மாக நடு­நிலை வகித்து வந்த இரு நாடு­கள், உல­கின் சக்தி­வாய்ந்த தற்­காப்­புக் கூட்­ட­ணி­யில் சேர­வி­ருக்­கின்­றன,” என்று வெள்ளை மாளிகை தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சல்­லி­வன் கூறி­னார்.

உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்­புக்கு எதி­ராக ஐரோப்­பாவை ஒன்­று­தி­ரட்­டு­வ­தற்கு திரு பைடன் முன்­னு­ரிமை அளித்து வரு­கி­றார். ஆனால், நேட்­டோ­வில் சுவீ­ட­னும் பின்­லாந்­தும் சேரு­வது குறித்து துருக்கி கேள்வி எழுப்­பி­யுள்­ளது. ஆனா­லும், இந்த விவ­கா­ரத்­தில் துருக்­கி­யின் கேள்விக்­குப் பதி­ல­ளிக்க முடி­யும் என அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் நம்­பு­வதாக திரு சல்­லி­வன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். நேட்­டோ­வில் புதி­தாக ஏதா­வது ஒரு நாடு சேர, அந்­தக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த உறுப்பு நாடு­கள் அனைத்­தும் ஒப்பு­தல் அளிக்க வேண்­டும்.

உக்­ரே­னுக்கு ஆயு­தங்­க­ளை­யும் மனி­தா­பி­மான உத­வி­யை­யும் வழங்­கு­வ­தற்­காக, $40 பில்­லி­யன் நிதி­ய­ளிக்க அமெ­ரிக்க காங்­கி­ர­சி­டம் இருந்து ஒப்­பு­தல் பெற­வி­ருக்­கும் வேளை­யில், திரு பைட­னின் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.

 

 

Tamilmurasu