UNHCR அட்டையை வைத்து இலஞ்சம் கேட்ட அமலாக்க அதிகாரி கைது

ஒரு தொழிலாளிக்கு சொந்தமான அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அங்கீகார  (UNHCR) அட்டையை திரும்ப கொடுக்க ரிம1,000 இலஞ்சம் கேட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் ஒரு நாள் விசாரணைக்காக காவலில்  வைக்கப்பட்டார்.

டாங் வாங்கி மத்திய லாக்கப்பில் நேற்று முந்தினம்(17/6), மாஜிஸ்திரேட் சியாஃபிகா நூரிண்டாவால் ஒரு ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக MACC -யின்  வட்டாரம் தெரிவித்தது.

“32 வயதான அந்த சந்தேக நபர் நேற்று இரவு 10 மணியளவில் செந்துலில்  கைது செய்யப்பட்டார், “என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

அந்த  நபர் மே 17 அன்று ஒரு கடையில் சோதனை செய்யும் போது  கைபற்றிய   தொழிலாளர்களின் UNHCR  அட்டைகளில் ஒன்றை திருப்பித் தருவதற்கு அந்த  கடை உரிமையாளரிடமிருந்து ரிம1,000 இலஞ்சம் கோரியதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில், கோலாலம்பூர் MACC  இயக்குனர் ரசாலியா ஏ.பி.ரஹ்மான் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 17(a) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.