நஜிப் பெக்கானில் போட்டியிட உறுதி பூண்டுள்ளார்

பாகாங் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு அந்த மாவட்டத்தை மேம்படுத்தவும் அங்குள்ள சமூகத்துக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்ய நஜிப் அப்துல் ரசாக் உறுதி பூண்டுள்ளார்.

“சிரமமாக இருந்தாலும் எளிதாக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் நான் பெக்கான் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன். என் உள்ளமும் ஆன்மாவும் பெக்கானில் உள்ளது. வேறு எங்கும் இல்லை.”

“ஆகவே நான் பிடிவாதமாக இருக்கிறேன். இன்னொரு தொகுதிக்கு மாறுமாறு சிலர் கேட்டுக் கொள்ளும் போது நான் மறுத்தேன். காரணம் பெக்கான் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை மெய்பிக்க நான் விரும்பினேன். அது நிரூபிக்கப்பட்டுள்ளதற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.”

நஜிப் பெக்கானில் பிறந்த 6,000 பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் நேற்றிரவு உரையாற்றினார்.

கவான் என அழைக்கப்படும் Kelab Anak Wawasan Pekan அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பெர்னாமா