கரையோர போர்க்கப்பல் மோசடியில் அமாட் ஜாஹிட் சிக்கினார்

கரையோர போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் குறித்த விசாரணை  அறிக்கை, அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி அந்த கப்பல் வாங்குவதில் தான் ஈடுபட வில்லை என்ற வாதத்தை கிழித்தெறிந்துள்ளது.

அரசாங்க கொள்முதல் அறிக்கை மற்றும் நிதி தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (JKSTUPKK) அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சான்றுகள்  ஜாஹிட்டின் சொந்த கையெழுத்தில் உள்ளன.

ஜூலை 8, 2010 அன்று Boustead Naval Shipyard (BNS) அனுப்பிய கடிதத்திற்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜாஹிட் தனது சொந்த கையெழுத்தின் வழி அதை செயல் படுத்தவும் என குறிப்பிட்டுள்ளார்.

அப்போது BNS நிர்வாக இயக்குநர் அமாட் ரம்லி முகமட் நோர் – முன்னாள் கடற்படைத் தலைவரும் ஆவார் – நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக LCS திட்டத்தைத் திட்டமிட்டு வருவதாக கடிதத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஆணை மற்றும் ஒப்புதல் உள்ளது என்று உற்பத்தியாளர்கள் நம்ப வைக்க அவர்களுக்கு அந்த ஒப்புதல் கடிதம் என்று ராம்லி கூறினார்.

BNS கடிதத்தின் அடிப்படையில், ஜாஹிட் கடிதத்தின் மேல் வலது மூலையில், “SUB Perolehan, sila laksanakan” (கொள்முதல் பிரிவு செயலாளர், தயவுசெய்து செயல்படுத்தவும்) என்று எழுதியிருந்தார்.

திட்ட செலவு

இதற்கு இணங்க, நிதி அமைச்சகம் அந்த ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று ஜாஹிடுக்கு அனுப்பிய குறிப்பில், LCS கொள்முதலுக்கான செலவு அதிகமாக இருக்கும் என்றும், நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் வளத் திறனுக்கு எதிராக எடைபோட வேண்டும் என்றும் திட்டச் செலவு தேவை என்றும் கூறியது. LOI வழங்கப்படுவதற்கு முன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றது.

பின்னர் அக்டோபர் 11 அன்று, பொருளாதார திட்டமிடல் பிரிவு (EPU) பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது, 10வது மலேசியா திட்டத்தின் கீழ் திட்டங்களுக்கான உச்சவரம்பு விலை மறுகட்டமைக்கப்படும் வரை LOI வழங்குவதை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

எவ்வாறாயினும், EPU பின்னர் BNS க்கு LOI ஐ வழங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது.

அக்டோபர் 15 அன்று, பாதுகாப்பு அமைச்சகம் BNS க்கு LOI ஐ வழங்கியது – இது தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் விலை நிர்ணயம் உட்பட பல விஷயங்களில் அமைச்சருக்கும் நிறுவனத்திற்கும் இடையே மேலும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது.

பிப்ரவரி 11, 2011 அன்று, பாதுகாப்பு அமைச்சகம் நிதி அமைச்சகத்திடம் அனுமதி கோரியது, இது BNS உடனான நேரடி பேச்சுவார்த்தை மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

அறிக்கையின்படி, BNS உண்மையில் 2008 ஆம் ஆண்டு முதலே அப்போதைய பாதுகாப்பு மந்திரி நஜிப் அப்துல் ரசாக்குடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திடம் இருந்து LOI பெற முயற்சித்து வந்துள்ளது.

ஜாஹிட்டைப் போலவே, நஜிப்பின் கீழ் இருந்த பாதுகாப்பு அமைச்சகமும் ஜனவரி 15, 2008 அன்று BNS க்கு LOI ஐ வழங்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது.

‘என் மீது குற்றம் சொல்வது நியாயமற்றது’

கடந்த வாரம், 2013 இல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலம் முடிவடைந்த பின்னர், இந்தத் திட்டம் வழங்கப்பட்டதால், LCS கொள்முதல் தோல்விக்கு அவரைக் குறை கூறுவது நியாயமற்றது என்று ஜாஹிட் கூறினார்.

இருப்பினும், பொதுக் கணக்குக் குழு மற்றும் JKSTUPKK ஆகியவை திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஜாஹிட் ஈடுபட்டிருந்ததை தெளிவாகக் காட்டுகின்றன.

ஒப்பந்தம் 2014 இல் மட்டுமே கையெழுத்திடப்பட்டிருந்தாலும், ஒப்புதல்  கடிதம் 2011 இல் வழங்கப்பட்டது.

Former BNS managing director Ahmad Ramli Mohd Nor

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது JKSTUPKK அமைக்கப்பட்டது மற்றும் முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் ஆம்ப்ரின் புவாங் அதற்கு தலைமை தாங்கினார்.

LCS திட்டம் RM9 பில்லியன் செலவில் கடற்படைக்காக ஆறு கப்பல்களை வாங்குவதாகும்.

முதல் கப்பல் 2019 இல் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே RM6 பில்லியன் செலுத்தியிருந்தாலும், இன்றுவரை அனைத்து கப்பல்களும் இன்னும் கட்டுமானத்தில்தான் உள்ளன. ஒரு கப்பல் கூட இன்னமும் கரைசேர வில்லை.