மில்லியன் கணக்கில் உள்ள மாணவர் கடன்களை ரத்து செய்யும் அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள மாணவர் கடன்களை ரத்துசெய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் அதிபராவதற்கு முன்னதாகப் பிரசாரத்தின்போது அவ்வாறு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தார்.பல்கலைக்கழகக் கல்விக்காக மாணவர்கள் 20,000 டாலர் வரை நிவாரண நிதிப் பெற அந்தத் திட்டம் வகை செய்யும்.

COVID-19 நோய்ப்பரவலிலிருந்து மீண்டுவருவதற்கு, மிக அதிகமான கல்விக் கட்டணங்களும், அவற்றின் தொடர்பிலான கடன்களும் முட்டுக்கட்டையாக இருப்பதாய்த் திரு. பைடன் கூறினார்.பொதுப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான கட்டணம், கடந்த பல ஆண்டுகளில் மும்மடங்காகிவிட்டது.

கிட்டத்தட்ட மூன்றில் ஓர் அமெரிக்க மாணவர், பல்கலைக்கழகக் கல்விக்குக் கடன் பெறுகிறார்.தற்போது சுமார் 45 மில்லியன் மாணவர்களுக்குக் கடன் இருப்பதாகவும், அவர்கள் மொத்தம் 1.6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கடனைத் திரும்பத் தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் பைடனின் புதிய திட்டத்துக்கு 300 பில்லியன் டாலருக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.

 

-smc