வான்ஃபய்சால்: PN தேர்தல் நிதியை வெளியிடாது

கட்சிக்கு நிதி அளித்தவர்களின் பட்டியலைப் பெரிகத்தான் நேசனல் வெளியிடாது என்று கூட்டணியின் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

அதன் துணைத் தலைவர் வான் அஹ்மட் ஃபய்சால் வான் அஹ்மத் கமல்(Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal) கூறுகையில், அரசியல் கட்சிகள் தங்கள் நிதியைப் பகிரங்கப்படுத்துவது நடைமுறை அல்ல.

“நாங்கள் பட்டியலை வழங்கமாட்டோம். இதற்கு முன் எந்த அரசியல் கட்சிகளும் அவ்வாறு (பெறப்பட்ட நிதிப் பட்டியலை முன்வைக்க) செய்யவில்லை,” என்றார்.

கூட்டணியின் 15வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்கான நிதியில் ஒரு அதிர்ஷ்ட குழுக்கள் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து வந்ததாகக் கூறியதற்காகப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தபின்னர் வான் ஃபய்சல் (மேலே) செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், அரசியல் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்க PN தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.