ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சண்டையில் 2 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்திலுள்ள புறநகர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் மாண்டனர்.

காணாமற்போன ஒருவரைத் தேடுவதற்காகச் சம்பவம் நடந்த இடத்திற்குக் காவல்துறையினர் நேற்றிரவு சென்றிருந்தனர்.

சம்பவ இடத்தில் ஒரு பெண் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆயுதமேந்திய இருவர் அங்குச் சென்றிருந்த காவல்துறை அதிகாரிகளைச் சுட்டனர் என்று முதற்கட்டத் தகவல்கள் கூறின.

சம்பவத்தில் காயமுற்ற 2 காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

 

 

-smc