இலங்கையில் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 140 நாட்கள் சிறையில் உள்ள வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் , மனித படுகொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியுமென்றால் மக்களுக்காக குரல் கொடுத்தவரை விடுதலை செய்ய முடியதது ஏன்?, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியும் என்றால் வசந்தவை விடுதலை செய்யாதது ஏன் போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

 

 

-ift