இலங்கையில் நீதிமன்றை அவமதித்த அரசியல்வாதி சிறையில் அடைப்பு

அரசியல்வாதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால்களை மடக்கி உட்கார்ந்து இருந்த குற்றச்சாட்டில் சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி,என்பவரையே பொலனறுவை நீதவான் நிமால், நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறைக்குள் வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மின்சாரம் – பிரதேச சபை ஊழியர்கள் கைது

தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அதிகாரி நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் எடுத்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலனறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றில் அவமரியாதை

நிமால் அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகியதுடன், நீதிமன்றில் காலுக்கு மேல் கால்போட்டு அவமரியாதையாக நடந்துகொண்டதால், மூன்று மணிநேர சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நீதியரசரால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

 

-ibc