ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கொழும்பில் கைது

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சேவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு இவர்கள் மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: