யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் மதகுருமார்கள் உட்பட்ட பலதரப்பினரை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருக்கோவிலில் உள்ள  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு சென்றுள்ளனர்.

இதன்போது மாணவர்கள் பயணித்த வாகனத்தையும் மாணவர்களையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்துள்ளனர்.

இதனையடுது;து புகைப்படம் எடுப்பதற்கு மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

 

-if