இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கிய சீனா

சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நீட்டிக்கும் திட்டத்தை சீனா முன்வைத்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இலங்கையினால் வங்கிக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

-jvp