புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டது

விடுதலைப்புலிகளின் இராணுவ அமைப்பினை பார்த்து இலங்கை அரசாங்கம் அச்சப்பட்டிருந்தாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அச்சமே பேச்சுவார்கைளை முன்னெடுக்கவேண்டும என அரசாங்கம் தயாராக இருந்தாகவும் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதற்கான திராணியும விடுதலைப்புலிகளிடம் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே விடுதலைக்காக போராடிய தமிழினத்திற்கு தீர்வு என்ற ஒன்று வரும் வரையில் அனைத்துக்கட்சிகளும் ஒருமித்து செயற்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கஜேந்திரகுமார் ஒருகருத்தையும் சுமந்திரன் இன்னொரு கருத்தையும் தாங்கள் இன்னொரு கருத்தையும் கூறிக்கொண்டிருந்தால் அரசாங்கத்திற்கு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என சுரேஸ் பிரேமசந்திரன் கோடிட்டு காட்டினார்.

 

-if