முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம் அதன்பின்னர் தேர்தலை பற்றி சிந்திப்போம்

நாடு பொருளாதார ரீதியில் வீழ்த்துள்ளமை தெரிந்திருந்தும் தேர்தலை நடத்துமாறு சிலர் பிடிவாதமாக இருக்கின்றனர்.

இது தேர்தலை நடத்துவதற்கான காலம் அல்ல நாட்டை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது.

இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த முடியாது

தற்போது நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. தேர்தலை நடத்த முடியாது என தெரிந்திருந்தும் எதிர்க்கட்சியினர் அடம்பிடிக்கின்றனர்.

முதலில் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம், அதன் பின்னர் தேர்தலை பற்றி சிந்திப்போம்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

 

-ibc