தாம்போயில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ பதிவு செய்யப்பட்ட சண்டையின் விசாரணையை எளிதாக்குவதற்காகப் போலீசார் ஐந்து பேரைக் கைது செய்தனர்.

24 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்கள் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற ஜொகூர் பாரு உத்தாரா காவல்துறைத் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

ஜொகூர் பாருவில் உள்ள தம்போய் என்ற இடத்தில் நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்ற சண்டை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

“சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ரிஸ்மான் சாஹிட்டை 019-7766043 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.