அன்னை மங்களம் காலமானார்

தூய வாழ்க்கை சங்கத்தின் (சுத்த சமாஜம்) வாழ்நாள் தலைவர், அன்னை ஏ மங்கலம், இன்று பிற்பகல் 3.52 மணிக்கு காலமானார்.

தன்னை தூய வாழ்க்கை சங்கத்துடன் அடையாளப்படுத்தி,  கடந்த 70 ஆண்டுகளாக அது தற்போது பெற்றிருக்கும் உயரிய  கட்டமைப்புக்கு காரண கர்த்தாவாக இருந்த அன்னை மங்களம் கடந்த  2023 மே 20 அன்று தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அது அவருக்கு ஒரு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது என்றும்  அதன் பிறகு அவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சையைப் பெற்றதாகவும் அந்த சங்கத்தின் உதவி தலைவர் வி.எல். காந்தன் தனது புலனச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 72 ஆண்டுகாலமாக சுத்த சமாஜத்தை ஆளுமைப்படுத்திய அவரின் மறைவு, சமூகத்திற்கு ஈடுகட்ட இயலாத ஒரு பேரிளப்பாகும் என்கிறார்.

இறுதிச் சடங்கு 12.06.2023, திங்கள் அன்று நடைபெறும் என்றும், இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர், ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2023 அன்று காலை 10 மணி முதல் சுத்த சமாஜ பொது மண்டபத்தில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.