சிலாங்கூரில் மஇகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடுகூட இல்லை – சரவணன் 

மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட தனது கட்சிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என்றார்.

“கிள்ளான் செந்தோசா தொகுதியை மஇகா கேட்டது, அதில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.”

“இருப்பினும், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்த இடம் பிகேஆர்-க்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது.”

“எனவே இது வரை, சிலாங்கூரில் போட்டியிட மஇகாவுக்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை” என்று சரவணன் (மேலே) மலேசியாகினியிடம் தெரிவித்தார்.