மகாதீர் & அன்வார்: அவதூறு வழக்கிலிருந்து நீதித்துறை ஆணையர் விலகல்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்த 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் ஜம்ஹிரா அலி விலகினார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி வழக்கறிஞருடனான அவரது குடும்ப உறவுகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.

இன்று பிற்பகலில் சிவில் வழக்கின் வழக்கு நிர்வாகத்தின்போது ஜம்ஹாரி இந்த விஷயத்தில் முடிவு செய்ததாக மகாதீரின் வழக்கறிஞர் முகமட் ரபீக் ரஷீத் அலி உறுதிப்படுத்தினார்.

பிகேஆர் தலைவர் அதிகாரத்தில் இருந்தபோது சொத்துக் குவிப்பதற்காக அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்மீது மனுதாரர் வழக்குத் தொடுத்துள்ளார்.