ராம்கர்பால்: சோஸ்மாவை ஒழிப்பது ‘நடைமுறையில் இல்லை’, அரசாங்கம் அதை மேம்படுத்தும்

விசாரணையின்றி நீண்ட காலம் காவலில் வைக்க அனுமதிக்கும் பாதுகாப்பு குற்றங்கள் (Special Measures) சட்டத்தை ரத்து  செய்ய அரசாங்கம் விரும்பவில்லை

அதற்குப் பதிலாக, பிரதமர் துறையின் (Law and Institutional Reform) துணை அமைச்சர் ராம்கர்பால் சிங்கின் கூற்றுப்படி, புத்ராஜெயா பல திருத்தங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று காலைப் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோஸ்மாவை ஒழிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேட்டபோது கூறினார்.