பதாங்களி, சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளைப் பார்த்ததாகக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது

பதாங்களி, கோ டோங் ஜெயா, குவாலா குபு பாரு மற்றும் செரெண்டா ஆகிய பகுதிகளில் நேற்றிரவு புலி ஒன்று சுற்றித் திரிவதைப் பார்த்ததாக நான்கு புகார்கள் கிடைத்ததாகப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹுலு சிலாங்கூர் துணைக் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ்(DSP Mohd Asri Mohd Yunus), உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் (Perhilitan) திணைக்களத்திற்கு போலிசார் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

“விவசாயம், மலை ஏறுதல், வனப்பகுதிக்குள் நுழைதல் போன்றவற்றின்போது பொதுமக்கள் விழிப்புடனும், கவனமாகவும் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

“புலிபற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ஹுலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-60641132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.