பங்களாதேஷ் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

பங்களாதேஷின் பைராப் நகரில் ரயில்கள் மோதிய விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 17க்கு உயர்ந்துள்ளது.

மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன. பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரயில்களின் சிதைவுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர் என்பதும் தெரியவில்லை.

பயணிகள் ரயில் சிவப்பு சமிக்ஞையைத் தாண்டிச் சென்றிருக்கலாம் என்று ரயில்வே இயக்குநர் கூறினார்.

 

 

-sm