செயல்திறன் குறைந்த டிஏபி தலைவர்கள் அகற்றப்படுவர் – லோக் எச்சரிக்கை

செயல்திறன் குறைந்த தலைவர்கள் கட்சியால் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை நிறைவு செய்ய  தவறினால் அவர்களை மாற்ற டிஏபி தயங்காது.

“எந்த தலைவரும் கட்சியின் (KPI) Jகேபிஐகளை சந்திக்கத் தவறினால், அவர்களுக்குப் பதிலாக வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று 22வது பேரா டிஏபி மாநாட்டில் பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் தனது தொடக்க உரையில் கூறினார்.

கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறிய லோக், கூட்டாட்சி, மாநிலம் மற்றும் மாநகராட்சி, ஊராச்சி என்ற  உள்ளூர் அரசாங்கத்தின் மூன்று நிலைகளிலும் கட்சிக்கு பிரதிநிதிகள் உள்ளனர் என்று கூறினார்.

“அனைத்து பிரதிநிதிகளும் கொள்கைகளை வடிவமைப்பதிலும், மக்களுக்கு நன்மைகளை வழங்குவதிலும் அரசின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

“இவையே செயல் திறனை மதிப்பீடு செய்யும்.. இந்த நோக்கங்கள் ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவூட்டப்பட வேண்டும்.

“நீங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படுகிறீர்கள் என்பதை எங்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

லோக் பின்னர் ஒரு விரிவான செயல்திறன் மதிப்பீட்டு பொறிமுறையை செயல்படுத்தியதற்காக பேரா டிஏபிக்கு நன்றி தெரிவித்தார்.

டிஏபிக்கு தற்போது 40 எம்.பி.க்கள், 90 மாநில சட்டமன்ற  உறுப்பினர்கள் மற்றும் ஒரு முதலமைசர் உள்ளனர்.

 

-fmt