குழந்தைகளை ஆபாசத்தில் ஈடுபடுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் சிறை, 21 பிரம்படிகள்

2019 ஆம் ஆண்டு பல தேசிய போலிஸ் அறிக்கைகள், அலாடின் லானிம் என்பவரை  உலகின் 10 மோசமான குழந்தை பாலியல்  குற்றவாளிகளில் ஒருவராக பெயரிடப்பட்டார்.

Alladin Lanim ஏற்கனவே குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பாலியல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்.

சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளில் கூச்சிங்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 21 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.

கூச்சிங்கில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில், 43 வயதான அல்லாடின் லானிம், 10 வயது சிறுவனுக்கு கேம் விளையாடுவதற்கான தொலைபேசியைக் கொடுத்து, ஒரு 10 வயது சிறுவனுக்கு வாய்வழி பாலியியல் வன்முறை செய்வதை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்பட்டது.

போர்னியோ போஸ்ட் படி, சிறுவனின் இளைய சகோதரர், அப்போது ஒன்பது வயது, அல்லாடினின் செயல்களைக் கண்டார் என்று அரசுத் தரப்பு கூறியது.

ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரண்டு ஆண்டு விசாரணையைத் தொடர்ந்து, 2021 இல் அவர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்ததைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பல தேசிய போலிஸ் அறிக்கையில், உலகின் மிக மோசமான 10 குழந்தை பாலியல்  குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.

43 வயதான அல்லாடின், தனது மொபைல் போனில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வடிவில் சிறுவர் ஆபாச படங்களை தயாரித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

40 ஆண்டுகள் சிறை, 21 பிரம்படிகள்

அல்லாடினுக்கு மொத்தம் 40 ஆண்டுகள் சிறையும் 21 பிரம்படிகளும்தண்டனையாக வழங்கப்பட்டது.

நீதிபதி ஐரிஸ் அவென் ஜான், இன்று முதல் சிறை தண்டனையை தொடர உத்தரவிட்டார்.

அரசு துணை வழக்கறிஞர் ருவினாசினி பாண்டியன் கூறுகையில், அல்லாடினிடம் குழந்தை பாலியியல் சம்பந்தபட்ட 7,371 புகைப்படங்கள் மற்றும் 2,541 வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

ஜூலை 5, 2021 அன்று போலீசார் ஒரு வீட்டை சோதனை செய்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

FMT