பூமிபுத்ரா  பொருளாதார மாநாடு இந்தியர்களுக்கு உதவுமா?

இம்மாத இறுதியில்  நடைபெற உள்ள பூமிபுத்ரா பொருளாதாரம் மாநாடு குறித்து  பத்திரிக்கை செய்தி அளித்த  பிரதமர்  அன்பார்  இப்ராஹிம்  இந்த மாநாடு  இந்தியர்களுக்கும் பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.

இது சார்பாக  கருத்துரைத்த  முன்னாள்  பினாங்கு மாநில  துணை முதல்வர்  டாக்டர் ராமசாமி  இந்த மாநாடு  இந்தியர்களுக்கு  பயன் அளிக்கும் என்று  பிரதமர்  கூறியிருப்பினும்  தான்  அதை  முழுமையாக  நம்பவில்லை என்ற வகையில்  தனது கருத்தை கூறியிருந்தார்.

கடந்த காலங்களில்  பூமிபுத்ரா  பொருளாதார மாநாடுகள்  முழுக்க முழுக்க  மலாய்க்காரர்கள்  சார்புடைய மாநாடு தான் நடைபெற்று வந்துள்ளது.  அதை ஒட்டி  கருத்துச் சொன்ன இராமசாமி  அன்வார் அவ்வகையில் இந்தியர்கள் இந்த மாநாடு வழி பயன் அடைய முடியும் என்றால்  அதே  ஒரு புதிய முன்னெடுப்பாகவும்  என்றும் கூறினார்.

இருப்பினும்  அத்தகைய வகையில்  இது நடைபெற வாய்ப்பு இல்லை என்றார்.

இராமசாமியின் கருத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பை தகற்றும் வகையில் இருந்தாலும், வறுமை என்ற நிலையில் இன்னமும் பின்னடைவில் உள்ள சமூகங்களுக்கான திட்டங்கள் வழி இந்தியர்களின் நிலைபாடி கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம். அதை நமது பிரதிநிதிகள் தெளிவாக முன்னெடுக்க வேண்டும்.