ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திடீரென ஏற்பட்ட மற்றொரு குழி

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில், கடந்த வெள்ளிக்கிழமை நில அமிழ்வில் இந்தியாவிலிருந்து வந்த சுற்றுப்பயணி சம்பவத்தை தொடர்ந்து, தரையில் திடீரென இடிந்து விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மற்றொரு நில அமிழ்வு பதிவாகியுள்ளது.

நேற்று இரவு பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இடத்தில் நடந்த சோதனையில், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நில அமிழ்வு பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயலெட்சுமி (48) என்பவரை தேடும் பணி இன்று ஆறாவது நாளாக நீடிக்கிறது.

 

-fmt