12 வயது மாணவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈப்போ ஆரம்பப் பள்ளியின் மூத்த உதவி ஆசிரியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பேராக் காவல்துறைத் தலைவர் அசிசி மாட் அரிஸ் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த விவகாரம்குறித்து மாணவரின் தாயார் புகார் அளித்ததை அடுத்து 37 வயதுடைய நபர் அக்டோபர் 11 அன்று கைது செய்யப்பட்டார்.

“47 வயதான தாய், தனது மகளை ஆசிரியர் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டதாகத் தெரிவித்தார்”.

“சந்தேக நபர் தனது மகளுக்கு அநாகரீகமான படங்களை அனுப்பியதாகவும் அவர் கூறினார்,” என்று அவர் கூறியதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டு மாதங்களாகப் பள்ளியில் இருந்த சந்தேக நபர், மாணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக நம்பப்படுவதாக அஸிஸி மேலும் கூறினார்.

“இப்போதைக்கு, ஒரே ஒரு பாதிக்கப்பட்டவர் மட்டுமே இருக்கிறார். வேறு ஏதேனும் சம்பவங்கள் இருந்தால் நாங்கள் விசாரிப்போம்,” என்று அவர் கூறினார், சந்தேக நபர் அக்டோபர் 17 வரை ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேராக் காவல்துறை தலைவர் அசிசி மாட் அரிஸ்

இந்த வழக்குப் பிரிவு 14 (A) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் தடியடிக்கு உட்பட்டது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் உடனடியாகப் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டதாகப் பிரதி கல்வி அமைச்சர் வோங் கா வோ நேற்று அறிவித்தார்.