இன்று காலை 8.55 மணிக்குப் பகோவின் புக்கிட் கெபோங்கில் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவான லேசான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.
இந்த நிலநடுக்கம் வடக்கு 2.4 டிகிரி மற்றும் கிழக்கு 102 டிகிரி கோணங்களில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
“பாகோவிலிருந்து தென்மேற்கே 16 கி.மீத்தொலைவில் அமைந்துள்ள இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை,” என்று மெட்மலேசியா ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதம்குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி தெரிவித்தார்.
மாநில அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், நிலையற்ற கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.

























