வெளிநாடுகளி​ல் மீண்டும் ஒன்றிணையும் விடுதலைப்பு​லிகள்!

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட பின் வெளிநாடுகளில் பரந்து வாழும் அவர்களின் அனைத்துலக குழுக்களை மீண்டும் இணைப்பதற்கு முனைப்புக்கள் இடம்பெறுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இலங்கையின் தேசிய பாதுகாப்பும் எதிர்கால சவால்களும்” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே இதனைத் தெரிவித்தார்.

மேலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிக் கட்டமைப்பு வசதி இன்னும் வலிமையாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGS: