ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 14 வயது (படிவம் 2) மாணவருக்கு 50 மணிநேர சமூக சேவை செய்ய பட்டு பகாட் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்னோ, அந்த மாணவர் இன்றைய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் இந்த சமூக சேவையை முடிக்குமாறு உத்தரவிட்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த மாணவர் 1,000 ரிங்கிட் பிணைத்தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை பிணையில் இருக்கவும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை பின்பற்றவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சமூக நலத்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், பட்டு பகாட் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவில், தனது கைபேசியில் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வைத்திருந்ததாக அந்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் ஷாஸ்லீன் இப்ராஹிம் ஆஜரானார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தரப்பில் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் டான் சாங் யான் ஆஜரானார்.
-fmt
























