பழனிவேல் தமது அமைச்சரவைக் கடமைகளை தெரிவித்துள்ளார்

மலேசிய நிர்வாக நவீன மய, நிர்வாகத் திட்டப் பிரிவு (மாம்பு) தேசியப் பொது நிர்வாகப் பயிற்சிக் கழகம் (இந்தான்) பொதுப் புகார்ப் பிரிவு (பிசிபி) ஆகியவை தமது பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஜி பழனிவேல் தெரிவித்துள்ளார்.

“நான் சிறப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்வேன். செப்டம்பர் 7ம் தேதிக்குப் பின்னர் பத்திரிக்கைகளுக்கு மேல் விவரங்களை அறிவிப்பேன்”, என்று கோலாலம்பூரில் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மஇகா தலைவருமான பழனிவேல் சொன்னார்.

அவர், ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு மிஸான் ஜைனல் அபிடின் முன்னிலையில் அமைச்சர் பதவிக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். அவர், நேற்று முன் தினம்,  தமது அமைச்சரவைக் கடமைகளை பற்றி விவாதிப்பதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்தார்.

பெர்னாமா

TAGS: