NUBE இருவரின் வேலை நீக்கத்திற்கு எதிராக போலீஸ் புகார்

தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (என்யுபிஇ) மலாக்கா கிளை உறுப்பினர்கள் அச்சங்கத்தின் உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் தலைமைப் பொருளாளர் சென் கா பாட்டும் ஜனவரி 31 ஆம் தேதி வேலை நீக்கம் செய்யப்பட்டதிற்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர்.

அப்புகாரை என்யுபிஇன் தெற்கு கிளை பொருளாளர் கமாருடின் புஜாங் மற்றும் இதர நான்கு உருப்பினர்களும் மலாக்கா, பண்டா ஹிலிர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் செய்தனர்.

அவ்விருவரையும் வேலை நீக்கம் செய்ததற்காகவும் மேபேங் ஊழியர்கள் அவ்வங்கிக்கு எதிராக மறியல் இறங்கக்கூடாது என்று மருட்டிய வங்கியின் மூத்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்ட வேண்டும் என்று அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.