இலங்கையிடம் குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப் பத்திரிகையை இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது.

அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் துறை பேச்சாளர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்றாலும் கூட தொடர்ச்சியாக அதன் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதேவேளை, இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டதை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: