ஏர் ஏசியாவுடன் உடன்பாடு காணப்பட்டால் எம்ஏஎஸ் ஊழியர்கள் மறியலில் ஈடுபடுவர்

எம்ஏஎஸ் ஊழியர்கள் 15,000 பேரும், ஏர் ஏசியா-எம்ஏஎஸ் உடன்பாடு காணப்படுமாயின்  மறியல் போராட்டத்தில் குதிக்கப்போவதாக மருட்டியுள்ளனர்.

“அந்த உடன்பாடு கையொப்பமானால், மறியலில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. மறியலில் ஈடுபட நாங்கள் தயார்”, என்று எம்ஏஎஸ் ஊழியர் சங்கத் (எம்ஏஎஸ்இயு) தலைவர் அலியாஸ் அசீஸ்  கூறினார்.

எம்ஏஎஸ்இயு தலைமைச் செயலாளர் அப்துல் மாலேக் அரிப், அந்த உடன்பாடு ஏர் ஏசியாவுக்கு ஒரு தேன்கிண்ணமாக இருக்கலாம் ஆனால், அதில் எம்ஏஎஸ் ஊழியர்களுக்கு ஆதாயம் இருப்பதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.