சுவரில் எழுதிய பெண்ணுக்கு சிங்கப்பூரில் பிரம்படி தண்டனை

சிங்கப்பூரில், சுவரில் எழுதிய, 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனை அளிக்கப்படும்.

விரும்பத் தகாத வாசகங்களை, பொது சுவரில் எழுதுவது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகின்றன.

அண்மையில் 25 வயது பெண், சுவரில் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை எழுதியதாகவும், சில ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனையோ, சிறை தண்டனையோ விதிக்கப்படலாம்.

கடந்த 94-ஆம் ஆண்டு, இதே போன்ற குற்றத்தை செய்த அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பே என்பவருக்கு பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.