சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற போலிசார் மீது சுற்றி வளைத்துத் தாக்குதல்

இலங்கையின் பண்டாரகம பகுதியில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற இலங்கை போலிசார் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த போலிஸ் அதிகாரி ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் போலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன் தினம் போலிசாரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது விலங்கு வதையில் ஈடுபட்டிருந்த சிலர் ஆயுதங்களால் போலிசார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ள பயன் படுத்தப்பட்ட ஆயுதங்களை போலிசார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

TAGS: