தேர்தலுக்கு முன்பு மறு குடியமர்வு என்கிறார் பாசில் ராஜபட்ச

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த அனைவரும் தேர்தலுக்கு முன்பே மறு குடியமர்வு செய்யப்படுவர் என்று அந்த நாட்டு மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பாசில் ராஜபட்ச நேற்று தெரிவித்தார்.

அதேநேரத்தில் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் அல்லாதவர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சி செய்வதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேர்தல் பதிவினை மறு ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம். அடுத்த தேர்தல் பதிவுக்கான கடைசி தேதி 2013 ஜூன் 1 ஆகும் என்றார் பாசில் ராஜபட்ச.

TAGS: