தமிழக முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம்!

தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகளை இலங்கையின் பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையர்கள் மீது அழுத்தம் மேற்கொள்கின்றனர் என்றார்.

கால்பந்தாட்ட வீரர்கள், பாதுகாப்புத் தரப்பினர்,யாத்திரை செல்வோர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு இலங்கையில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்னவாகும்?

இந்தியாவில் இலங்கையர்கள் மீது அழுத்தங்களை மேற்கொள்ளும் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுயைமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளை முட்டாள் என கூறும் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச மிகப் பெரிய முட்டாள் என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

இலங்கையில் சிங்களவர்களோடு தமிழர்கள் சேர்ந்து வாழமுடியாததுக்கு முக்கிய காரணம் இவர் போன்ற சில இனவாத வெறி பிடித்த முட்டாள் அமைச்சர்கள் தான் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.

TAGS: