மகிந்தா ராஐபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

அமெரிக்காவில் தங்கியுள்ள இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நியூயோர்க் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இத்தகவலை ஈ.ஐ.என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட கர்ணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே மகிந்தாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என அச்செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்டப்பபோரின்போது இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட புலிகளின் பொறுப்பாளர் ரமேஸின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் வழக்கறிஞர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

கர்ணல் ரமேஸின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே அந்நாட்டு குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து மகிந்தா அவசரமாக இலங்கைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: