தபாலில் வந்த மலைப்பாம்புகள்; ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்!

ஜோகன்னஸ்பர்க்: தபால் பொதியில் அனுப்பப்பட்ட மலைப்பாம்பை கண்டு, தபால் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள சபி நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

சபி நகரத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த தபால்பொதிகளை, ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து கொண்டிருந்தனர். வந்த தபால்பொதிகளுக்கு நடுவே, வெள்ளை மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. இதை கண்டு, ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

அதன் பின், வனத் துறையினர் உதவியுடன் ஒரு மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. மேலும், மூன்று மலைப்பாம்புகள் பொதியிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

மலைப்பாம்பை உரிய முறையில் பெறாமல், தபால்பொதியில் அனுப்பி பெற்று கொள்ள முயன்றவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாம்பைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடிய தபால் ஊழியர்களுக்கு வெள்ளை மலைப்பாம்புகள் விஷமற்றது என பின்னர்தான் தெரியவந்தது.