வெலிக்கடைச் சிறை மோதல் : சிறையில் விசாரணை நடத்திய இந்திய அதிகாரிகள்

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற போலீஸ்-கைதிகள் மோதல் சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அத்துடன் இச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகள் உள்ளனர். மேலும் 5 கைதிகளின் வழக்குகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையிலேயே இந்திய அதிகாரிகள் அங்கு சென்று சம்பவம் தொடர்பிலும் இந்தியக் கைதிகளின் நலன் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டதுடன் கைதிகளின் நிலை குறித்து விசாரணைனளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, சிறையில் மோதல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

TAGS: