இந்திய மாணவி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் கைபாவை பான் கீ மூன்

banki_moonஇந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது என்று கூறியுள்ளாராம் இந்த பான் கீ மூன்.

இந்திய மாணவி கற்பழிக்கப்பட்ட விடயமானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். எனினும், தமிழர்கள் விடயத்தில் அனைத்துலக சமூகம் நேர்மையாக நடந்துகொள்கிறதா? என்பதே நம்முள் எழுந்துள்ள கேள்வி.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப் பட்டபோதும் பல தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமையாக கொல்லப்பட்டபோது அமைதி காத்துவிட்டு இப்பொழுது இந்தியாவில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டவுடன் துள்ளிக் குதிக்கிறது இந்த கைப்பாவை.

தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இவர்களுக்கு…