மலேசியத் தமிழர்களே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்

Indian-crowdபல நாடுகளை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய தமிழர்கள் இப்பொழுது ஒரு நாடும் இல்லாமல் வெட்ககேடாக அடிமை வாழ்வு வாழ்வுகின்றனர்.

குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு வெட்கம், தன்மானம், சுயமரியாதை இல்லையா? உங்களுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்.

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் இந்திய சமுதாயத்தின் உரிமைகளை, சலுகைகளை, நலனைப் பற்றி சிந்திக்காமல் அம்னோவின் அடிமை போல் நடந்து கொள்கிறது. இந்த கட்சியால் நம் சமுதாயம் இழந்தது மிக மிக அதிகம். இதனால் இந்த சமுதாயம் மிகவும் சிரமத்துடன் வாழ்கையை நடத்தவேண்டியுள்ளது.

நம் பிள்ளைகளின் எதிர்கால நல் வாழ்க்கை கேள்வி குறியாகவே மாறியுள்ளது. நாம் இவர்களுக்கு கொடுத்த 55 ஆண்டு கால ஆட்சி போதுமானது. வரும் 13-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை மாற்றியே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

மலேசியத் தமிழர்கள் கடந்த 55 வருடங்கள் தங்களின் உரிமைகளையும் சலுகைகளையும் இழந்து, பெரும்பாலான வேலை வாய்ப்புகளையும் இழந்து, பெரும்பாலானோர் ஏழைகளாகவே வாழ்ந்தாலும், மேல் கல்வி பயில மிகவும் குறைவான இடங்கள் கிடைத்தாலும், இந்நாட்டில் தங்களுக்கு பல அநியாயங்கள், அநீதிகள், காவல் துறையினரின் கொடுமைகள் நடந்தாலும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும், பேரப் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநல, கோழை, ஏமாற்றும் போலி அரசியல்வாதிகளின் இனிப்பான வாக்குறுதிகளை நம்பி, நம்பி இன்னமும் ஏமாந்ததால் இவர்களுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் சீனர், மலாய்கார சமுதாயத்திடம் தான் கையை கட்டி அடிமைகளாக வேலை செய்ய நேரிடும்.

ஏமாறுவதை இத்தோடு நிறுத்திக்கொண்டு இந்த கொடிய, இன, மதவாத அம்னோவின் பிடியில் இருக்கும் தேசிய முன்னணிக்கு உங்களின் ஒரே பொக்கிசமான வாக்கை போடவே போடாதீர்கள்.

-Karanraj Sathianathan

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272