ஆஸ்திரேலியா ஜீலோங் நகரில் ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி!

ltte_flagஆஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong)  நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக் கம்பத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

சிறி லங்காவின் சுதந்திர நாளைப் புறக்கணித்து, தமிழ் மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது.

மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங்  (Geelong)  நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது.

இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின.

TAGS: