ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது: விக்ரமபாகு

vicramabakuஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைப் பேரவை, சர்வதேச நாணய நிதியம் என பல்வேறு வழிகளிலும் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி கவலையடைவது மிகவும் நல்லது. எனினும் ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கி வருகின்றது.

சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, ஆட்சி பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

TAGS: