ராஜபக்சேவின் ஆட்சியைக் கவிழ்க்க ஓரணியில் எதிர்க்கட்சிகள்

sri lankan partiesஇலங்கையிலுள்ள சகல இன மக்களினதும் சம உரிமை மற்றும் சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சி ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒன்பது கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.

இந்தக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.  இந்த எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துள்ள போதிலும் நேற்றைய நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. எனினும், வேறோரு தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைச்சாத்திடுமென தெரிவிக்கப்படுகின்றது.’

ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல், தேசிய உடன்பாடு, சட்டத்தின் சமத்துவம், சமூக நியாயம், சர்வதேச பார்வை மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களுக்கு இணக்கப்பாடு தெரிவித்து அவற்றை உறுதிசெய்வதற்காகப் போராட இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கைகளை கோர்த்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

TAGS: