இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை அவசியம் : மனித உரிமை கண்காணிப்பகம்

imagesஇலங்கை மீது சர்வதேச சுயாதீன போர்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துமாறு கோரி மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

2012-ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் தீர்மானத்தின்படி முறையான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அக்கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாறாக கடந்த ஆண்டில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: