சபா ஆர்சிஐ தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

RCIசபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தின் தவணைக் காலம் மேலும்  ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் மார்ச் 21ம் தேதி அந்த ஆர்சிஐ-யின் தவணைக் காலம் முடிவடைவதாக இருந்தது.

ஆர்சிஐ தனது விசாரணைகளை முடித்துக் கொண்டு அறிக்கை வழங்குவதற்கு உதவியாக அகோங், கால நீட்டிப்பை வழங்கியுள்ளதாக ஆர்சிஐ செயலாளர் சரிபுடின் காசிம் கூறினார்.