தமிழ் பத்திரிகைப் பணிமனைகள் மீது சிங்களர்கள் தாக்குதல்

utayanஇலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை பணிமனைகள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அப்பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அங்கு இருந்த சிங்கள இராணுவத்தின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடந்து உள்ளதாக மேலும் தெரியவருகிறது.

TAGS: