பாஸ்டன் குற்றவாளிக்கு மரண தண்டனை?

boston bomb blastபாஸ்டன் மாரத்தான் போட்டியின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய குற்றவாளி, மருத்துவமனையில் நேற்று கைது செய்யப்பட்டான்.

டிசோஹர் சர்னேவ் என்ற அந்த நபர், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பலரையும் கொலை செய்த குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளி கழுத்தில் குண்டு துளைத்ததால் அவர் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும், தாக்குதலுக்கான காரணம் குறித்து அவனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கேமிரா பதிவுகள் மூலம் அவன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.