புலிகள் இருந்­தி­ருந்தால் தமிழர் தாயகத்தில் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து : TNA

TNA-sampanthanஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை. எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் நாடாளுமன்ற உறுப்பின­ரு­மான இரா. சம்பந்தன் தெரி­வித்தார்.

எமது கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் சிங்­கள மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் ஏற்­றுக் கொண்­டுள்­ளனர். சிங்­கள மக்கள் எம்மை நேசிக்­கின்­றனர். எங்­க­ளுக்கு தீர்வைத் தர தயா­ராக உள்­ளனர்.

ஆனால் அர­சியல் தலை­வர்கள் தமது சுய­ந­ல­னுக்­கா­கவும் தமது பத­வி­க­ளுக்­கா­கவும் எமது உரி­மை­களை தர மறுக்­கின்­றனர்.

விடு­தலைப் புலி­களை பல நாடு­கள் ஒன்று சேர்ந்தே அழித்­தி­ருந்­தன. புலிகள் இன்று இருந்­தி­ருந்தால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மாநிலங்களில் இடம்­பெற்று வரும் பல்­வேறு கெடு­பி­டிகள் ஏற்படுவ­தற்கு வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

TAGS: